Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 03 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கர்ணன்
தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற மாணவிகளை வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபர் ஒருவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் மாணிக்கராசா கணேசராசா வெள்ளிக்கிழமை (03) உத்தரவிட்டார்.
தற்போது தனியார் கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வரும் இந்த அதிபர் அங்கு கல்வி கற்க வரும் 5 பாடசாலை மாணவிகளை வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என அவருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபரான முன்னாள் அதிபரை கைது செய்த பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இதன்போது, தனக்கு பிணை வழங்குமாறு சட்டத்தரணியூடாக முன்னாள் அதிபர் மன்றில் கோரியிருந்தார்.
எனினும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி பிணை வழங்கக்கூடாது எனவும், புங்குடுதீவு மாணவி போன்று கொலைகள் நடக்காமல் இருக்க இவரை விளக்கமறியலில் வைக்கவேண்டும் எனவும் கூறினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதவான் முன்னாள் அதிபரை விளக்கமறியலில் வைத்து உத்தரவிட்டார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago