2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பொலிஸார் மீது தாக்குதல்: சுயாதீன விசாரணைக்கு நீதவான் உத்தரவு

Sudharshini   / 2015 ஜூலை 04 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது பொலிஸாரை தாக்கிய சந்தேக நபர்களை, எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதிநந்தசேகரன் வெள்ளிக்கிழமை (03) உத்தரவிட்டார்.

அத்துடன், சந்தேக நபர்கள் பொலிஸாரை தாக்கியமை தொடர்பில் யாழ். பொலிஸ் பிராந்தியம் இரண்டுக்கும் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலமையில், சுயாதீன விசாரணைகளை மேற்கொண்டு அதன் அறிக்கையை சமர்பிக்குமாறு கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதவான் பணித்தார்.

கடந்த மாதம் 19ஆம் திகதி தவசிக்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில்  ஈடுபட்ட சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்ய முற்பட்டனர். இதன்போது சம்பவ இடத்தில் ஒன்று கூடிய அப்பகுதி மக்கள், சந்தேகநபரை கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் கடுமையாக தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .