Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூலை 05 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ற.றஜீவன்
பருத்தித்துறை, தும்பளை மணல் ஒழுங்கை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணெருவரை 285 கிராம் ஹெரோயினுடன் ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணும் அவரது கணவனும் ஹெரோயின் விற்பனையில் ஈடுபடுவதாக இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் ஹெரோயினை பெற்றுக் கொள்வது போன்று பாவனை செய்து பருத்தித்துறை கடற்கரைப்பகுதிக்கு இருவரையும் அழைத்துள்ளனர்.
குறித்த இடத்துக்கு வந்தபோது பெண்ணின் கணவன், வந்திருப்பது பொலிஸார் என அடையாளம் கண்டுதப்பி ஓடியுள்ளார். எனினும் குறித்த பெண்ணை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட 285 கிராம் ஹெரோயின் சுமார் 10 மில்லியன் பெறுமதியானது எனவும் திங்கட்கிழமை (06) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பெண்ணை ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .