Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
George / 2015 ஜூலை 06 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் 26 பேரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட பதில் நீதவான் எஸ்.சுப்பிரமணியம், திங்கட்கிழமை (06) உத்தரவிட்டார்.
கடந்த மாதம் ஜீன் 21ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பை அண்மித்த இலங்கை கடற்பரப்பில் 05 விசைப்படகில் வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக காரைக்கால் மற்றும் நாகப்பட்டிணத்தை சேர்ந்த 26 மீனவர்களை காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.
தொடர்ந்து அவர்கள், யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இன்று திங்கட்கிழமை(06) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
திங்கட்கிழமை(06) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதவான் மீனவர்கள் 26 பேரின் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .