2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தங்கூசி வலையை பயன்படுத்திய எண்மர் கடற்படையினரால் கைது

George   / 2015 ஜூலை 06 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

புங்குடுதீவு கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட தங்கூசிவலையை உபயோகித்து மீன்பிடியில் ஈடுபட்ட எட்டுபேரை கடற்படையினர் கைது செய்து தம்மிடம், திங்கட்கிழமை (06) ஒப்படைத்துள்ளதாக யாழ்ஸ. கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள பிரதி பணிப்பாளர் பி.ரமேஸ்கண்ணா தெரிவித்தார்.

கைதான எண்மரும் காக்கைதீவு, சாவற்கட்டு பகுதியினை சேர்ந்தவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

கைதான சந்தேகநபர்களை திங்கட்கிழமை(06) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .