2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற மூவருக்கு அபராதம்

Sudharshini   / 2015 ஜூலை 07 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற மூவருக்கு தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி திங்கட்கிழமை (06) தீர்ப்பளித்தார்.

கடந்த வாரம் மானிப்பாய் பொலிஸாரும், மின்சார சபையின் அதிகாரிகளும் இணைந்து நடத்திய திடீர் நடவடிக்கையின் போது சுதுமலை கட்டுடை பகுதியில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற மூவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

குறித்த மூவருக்கும் எதிராக திங்கட்கிழமை (06) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் மின்சார சபை அதிகாரிகள் வழக்கு தாக்கல் செய்தனர். சந்தேகநபர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டதையடுத்து நீதவான் தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்தார்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .