Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Sudharshini / 2015 ஜூலை 07 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.கர்ணன்
அல்வாய் வடக்கு பகுதியில் பனங்காணியினுள் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை பருத்தித்துறை மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்களும் பருத்தித்துறை பொலிஸாரும் இணைந்து செவ்வாய்க்கிழமை (07) முற்றுகையிட்டுள்ளதாக பருத்தித்துறை மதுவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன்போது 50 லீற்றர் கசிப்பு, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டன.
மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடம் சுற்றிவளைக்கப்பட்ட போது அங்கு கசிப்புக் காய்ச்சிக் கொண்டிருந்த இருவர் தப்பியோடியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட 50 லீற்றர் கசிப்பு, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் என்பனவற்றை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago