2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கொடிகாமத்தில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் கைது

George   / 2015 ஜூலை 09 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

கொடிகாமம் இராமாவில் பகுதியில் விருந்தினர் விடுதியென்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியை புதன்கிழமை (08) இரவு 8 மணிக்கு சுற்றிவளைத்து அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த வவுனியாவைச் சேர்ந்த பெண்ணொருவரையும் விடுதி உரிமையாளரையும் கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி விருந்தினர் விடுதியில் அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விருந்தினர் விடுதிக்குச் பொலிஸார் சென்றனர்.

இதன்போது, அங்கு விபச்சாரம் நடைபெற்று வருகின்றமை தெரியவந்தது.

இதனையடுத்து, விருந்தினர் விடுதியைச் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தி, விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பெண் மற்றும் உரிமையாளர் ஆகியோரைக் கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .