Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூலை 17 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
காரைநகர் பகுதியில் மதுபான போத்தல்களை வீட்டில் வைத்து விற்பனை செய்த வயோதிப மாதுவுக்கு ஒருமாத காலம் சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் வியாழக்கிழமை (16) உத்தரவிட்டார்.
180 மில்லிலீற்றர் அரசமதுபான போத்தலை வீட்டில் வைத்து விற்பனை செய்த வயோதிப மாதுவினை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்திருந்தனர். வியாழக்கிழமை (16) நீதிமன்றில் முற்படுத்திய போது, சந்தேகநபர் தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டார்.
குற்றத்திற்காக 15,000 ரூபாய் அபராதம் விதித்த நீதவான் கட்டத்தவறின் 1மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்குமாறு உத்தரவிட்டார். சந்தேக நபர் அபராத தொகையை செலுத்த தவறியதை அடுத்து நீதவான் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
34 minute ago
42 minute ago
49 minute ago