2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சந்தேகத்துக்கிடமாக நடமாடியவர் கைது

Menaka Mookandi   / 2015 ஜூலை 17 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுன்னாகம் நகரப்பகுதியில் உள்ள மதுபான நிலையத்திற்கு முன்னால் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூவரை வியாழக்கிழமை (16) இரவு 12:00 மணியளவில் கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் வெள்ளிக்கிழமை (17) தெரிவித்தனர்.

கைதான மூவரும் மானிப்பாய், தெல்லிப்பளை பகுதிகளை சேர்ந்த 52, 45 மற்றும் 35 வயதுடைய நபர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது முரணான வகையில் பதிலளித்தமையால் சந்தேக நபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .