2025 ஜூன் 25, புதன்கிழமை

தெல்லிப்பழை தமிழ்ச் சங்கத்தின் ஆடிப்பிறப்பு நிகழ்வு

Thipaan   / 2015 ஜூலை 18 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

தமிழர்களின் திருநாளான ஆடிப்பிறப்பு தெல்லிப்பழை தமிழ் சங்கத்தினால் வெள்ளிக்கிழமை (17) மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வு, சங்கத்தலைவர் சங்கரப்பிள்ளை சவானந்தராசா தலைமையில் நடைபெற்றது.

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வளாகத்தில் ஆடிக் கூழ் காச்சி கொழுக்கட்டையுடன் தமிழர் பாரம்பரியத்துக்கு ஏற்ப சிரட்டைகள் மற்றும் பலா இலைகள் கோலியில் பொது மக்களுக்கு கூழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய  தேவஸ்தானத்தலைவர் ஆறு திருமுருகன், தெல்லிப்பளை பிரதேச செயலக கலாச்சார அலுவலர் திருமதி தாட்சாயினி செல்வக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆசியுரையை காசிப்பிள்ளையார் ஆலய குரு வரதராஜேஸ்வரக் குருக்கள் வழங்கினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .