2025 ஜூன் 25, புதன்கிழமை

வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை

Princiya Dixci   / 2015 ஜூலை 19 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.விஜயவாசகன்

யாழ். மட்டுவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றில் சனிக்கிழமை (18) இரவு 14 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் பின் கதவை இரவு உடைத்து உள்நுழைந்த திருடர்கள், வீட்டிலுள்ளவர்களை கத்தியைக் காட்டி மிரட்டி அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 22 பவுண் நகைகளை திருடிச்சென்றுள்ளனர்.

எனினும், திருடிச் செல்லும் போது 8 பவுண் நகைகள் வீட்டின் வெளிப்புறத்தில் விழுந்துள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .