Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 27 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 26பேரையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் மாணிக்கராசா கணேசராசா, இன்று திங்கட்கிழமை (27) உத்தரவிட்டார்.
கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி, பருத்தித்துறை கடற்பரப்பில் 5 விசைப்படகுகளில் வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில், தமிழகத்தின் காரைக்கால் மற்றும் நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த 26 மீனவர்களை காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.
தொடர்ந்து, யாழ் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அம்மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago