2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

67 வயது முதியவருக்கு சீர்திருத்த உத்தரவு

George   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்     

கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 67 வயதுடைய முதியவரை 3 மாதகாலம் சமுதாயம்சார் சீர்திருத்தப் பணிக்கு உட்படுத்துமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா, வியாழக்கிழமை (13) தீர்ப்பளித்தார்.

180 மில்லிலீற்றர் கசிப்பை வைத்திருந்த குற்றச்சாட்;டில் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வயோதிபர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதன்போது, வயோதிபரால் அபராதம் செலுத்த முடியாது என்பதால் சமூதாய சீர்திருத்த பணிக்கு உட்படுத்துவதாக நீதவான் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .