Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Gavitha / 2016 பெப்ரவரி 17 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கச்சதீவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் வைத்து, இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கை கடற்படையினர் மறுத்துள்ளனர்.
இந்திய மீனவர்கள், இலங்கை கடல் எல்லையை மீறி மீன்பிடியில் ஈடுபட்டால் மாத்திரமே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், அவர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமே ஒழிய, தாக்குதல் மேற்கொள்ளப்படாது என்று கடற்படையின் பேச்சாளர் அக்ரம் அலி குறிப்பிட்டுள்ளார்.
இதனால், இந்திய மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றின் செய்தியின் பிரகாரம், இலங்கை கடற்படையினர் திங்கட்கிழமை (15) கச்சதீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 10 அந்திய மீனவர்களை தாக்கியதாகவும் இதனால் அவர்கள் காயங்களுக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago