2025 ஜூன் 26, வியாழக்கிழமை

28 வருடங்களின் பின், போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது

Editorial   / 2018 பெப்ரவரி 06 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

28 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட பொன்னாலை – பருத்தித்துறை வீதிக்கான போக்குவரத்து இன்று (06) காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு முதல் குறித்த வீதி உட்பட பல பிரதேசங்கள் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டன.

எனினும், அண்மைக்காலமாக குறித்த பகுதிகள் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில், நேற்று (5) குறித்த வீதி விடுவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விடுவிக்கப்பட்ட பொன்னாலை – பருத்தித்துறை வீதிக்கான போக்குவரத்து இன்று (06) காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் உட்பட இராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .