Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேசத்திலுள்ள கிராமிய மற்றும் பிரதான வீதிகளை புனரமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், மாந்தைகிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், நீர்ப்பாசனத்திணைக்களத்திற்கு சொந்தமான சுமார் 120 கிலோமீற்றர் வீதியும், பிரதேசசபைக்குச்சொந்தமான 110 கிலோமீற்றர் நீளமான வீதியும், வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்குச்சொந்தமான 85 கிலோமீற்றர் நீளமான வீதியும் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன.
இவ்வாறு வீதிகள் புனரமைப்பு செய்யப்படாமையினை காரணமாகக்காட்டி, பின்தங்கிய பகுதிகளுக்கான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் இப்பகுதிகளில் வாழும் மக்கள் தமது அன்றாடத்தேவைகளை நிறைவு செய்வதற்கான போக்குவரத்து வசதிகளின்றி பல துன்பங்களை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஓவ்வொரு வருடமும் வடக்கின் வசந்தம் முரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டம் என காலத்தை இழுத்தடித்து, தற்போது குறித்த முக்கியமான வீதிகளை ஐ.றோட் திட்டத்தின் கீழ் புனரமைத்து தருவதாக கூறி வருவதாகவும், கிராம மட்ட அமைப்புக்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டியுள்ளதுடன், குறித்த வீதிகளை புனரமைத்துத்தருமாறும் பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago