2025 ஜூன் 18, புதன்கிழமை

34 இந்திய மீனவர்கள் நெடுந்தீவில் கைது

Super User   / 2013 மார்ச் 14 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுபுன் டயஸ்

நெடுந்தீவு கடற் பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த சுமார் 34 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று வியாழக்கிழமை வழி மறித்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஐந்து படகுகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இவர்கள் அனைவரும் நெடுந்தீவு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 19 இந்திய மீனவர்கள் தலை மன்னார் பொலிஸாரிடம் இன்று வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .