2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

116 இந்திய மீனவர்கள் விடுதலை

Menaka Mookandi   / 2014 மார்ச் 12 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன், சுமித்தி தங்கராசா

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 116  பேரும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தரவிற்கமைய ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமாரினால் இன்று (12) விடுதலை செய்யப்பட்டனர்.

நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து கடந்த ஜனவரி 30ஆம் திகதி 6 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 38 இந்திய மீனவர்களும், காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து பெப்ரவரி முதலாம் திகதி 5 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 19 மீனவர்களில் 4 பேரும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

38 இந்திய மீனவர்களில் ஒருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், மேற்படி 19 மீனவர்களில் மிகுதி 15 மீனவர்களையும், யாழ்.தீவுப்பகுதிக்கு அண்மித்த பகுதியில் வைத்து பெப்ரவரி 3ஆம் திகதி 8 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 30 மீனவர்களையும், பெப்ரவரி 12ஆம் திகதி நெடுந்தீவு தெற்குக் கடற்பரப்பில் வைத்து 7 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 29 மீனவர்களையும் விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் உத்தரவு கிடைக்கப் பெற்றுள்ளதுடன், அவர்களும் விடுவிக்கப்படவுள்ளனர்.

இதனடிப்படையில் இன்று (12) மொத்தமாக 116 மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .