2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

7 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளை: இருவர் கைது

Kogilavani   / 2014 ஜூலை 10 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.புத்தூர் வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றினுள் புதன்கிழமை (09) அதிகாலை நுழைந்து வீட்டிலிருந்தவர்களைக் கட்டிப் போட்டுவிட்டு, வீட்டிலிருந்த நகைகள் உள்ளிட்ட 7 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்தமை தொடர்பில் இருவரை புதன்கிழமை (09) மாலை கைதுசெய்ததாக அச்சுவேலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.எம்.கே.சமன்ஜெயசிங்க வியாழக்கிழமை (10) தெரிவித்தார்.

ஏழாலை வடக்கு மற்றும் புத்தூர் கலைமதி ஆகிய இடங்களைச் சேர்ந்த இருவரே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள், பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டிற்குள் மூவர் கொண்ட குழு உள்நுழைந்து வீட்டிலிருந்த 14 ¼ பவுண் நகைகள் மற்றும் கமரா மற்றும் கைத்தொலைபேசி உள்ளிட்டவற்றினைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து இது தொடர்பில் வீட்டு உரிமையாளர் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொண்ட போதே குறித்த இருவரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .