2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

7 மில்லியன் ரூபா செலவில் புதிய தபாலகம் திறப்பு

Kogilavani   / 2013 மார்ச் 14 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

பருத்தித்துறை தாளையடி பகுதியில் புதிய தபால் நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அஞ்சல் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

எதிர்வரும் 17 ஆம் திகதி பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக தபால் நிலையத்தினை திறந்துவைக்கவுள்ளார்.

இத்தபாலகம், என்ரிப் நிறுவனத்தின் நிதியுதவியுடன் சுமார் 7 மில்லியன் நிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக, தாளையடி கரையோர பிரதேச மக்களுக்கு சிறந்த சேவையாற்றுவதற்கு இத்தபால் நிலையம் பெரிதும் உதவுமென்றும் யாழ். மாவட்ட அஞ்சல் திணைக்களத்தினர் மேலும் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .