2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

87 மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்

இந்திய மீனவர்கள் 87 பேரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையும் விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் வியாழக்கிழமை (13) உத்தரவிட்டுள்ளார்.

ஜனவரி 30 ஆம் திகதி நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட இராமேஸ்வரம் பகுதியிலிருந்து 8 படகுகளில் வந்த 38 மீனவர்களும், பெப்ரவரி 1 ஆம் திகதி காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட ஜகதாப்பட்டிணத்திலிருந்து 5 ரோலர்களில் வந்த 19 மீனவர்களும், பெப்பரவரி 3 ஆம் திகதி காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம், இராமநாதபுரம், தஞ்சை ஆகிய பகுதிகளிருந்து 8 படகுகளில் வந்த 30 மீனவர்களும் இவ்வாறு தொடர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .