2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

87 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 27 , மு.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் கபிலன்

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 87 பேரில் 45 பேரை மார்ச் மாதம் 11ஆம் திகதி வரையிலும், 42 பேரை மார்ச் 12ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் நேற்று (26) உத்தரவிட்டார்.

ஜனவரி 30ஆம் திகதி நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் பகுதியிலிருந்து 8 படகுகளில் வந்த 38 மீனவர்களும், பெப்ரவரி 1ஆம் திகதி காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட ஜகதாப்பட்டிணத்திலிருந்து 5 ரோலர்களில் வந்த 19 மீனவர்களும், பெப்பரவரி 3ஆம் திகதி காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட இராமேஸ்வரம், இராமநாதபுரம், தஞ்சை ஆகிய பகுதிகளிருந்து 8 படகுகளில் வந்த 30 மீனவர்களும் ஏற்கனவே ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் மேற்படி மீனவர்களின் வழக்கினை நேற்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான், மீனவர்களை சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து கொண்டு செல்வதில் இருக்கும் சிரமத்தினைக் கருத்திற்கொண்டு, பெப்ரவரி 1ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட 19 மீனவர்களில், ஜனவரி 30ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட மீனவர்களின் வழக்குடன் 4பேரையும், பெப்ரவரி 3ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட 30 மீனவர்களின் வழக்குடன் 15 பேரையும் இணைத்து இரண்டு வழக்குகளாக மாற்றியதுடன் அவர்களுக்கான விளக்கமறியலை நீடிக்கவும் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .