2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

9 இலட்சம் ரூபா செலவில் மைதானம் புனரமைப்பு

Kogilavani   / 2014 மார்ச் 12 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அட்டாளைச்சேனை அந்நூர் மகாவித்தியாலத்திற்கான விளையாட்டு மைதானம் 9 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு செவ்வாய்க்கிழi(11) உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதி அமைச்சினால் வழங்கப்பட்ட நிதியின் மூலம் இவ்வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மிக நீண்ட காலமாக இவ்விளையாட்டு மைதானம் புனரமைக்கபடாமல் இப்பாடசாலை மாணவர்கள் தமது விளையாட்டு நிழ்ச்சிகளை மேற்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்திருந்தனர்.

இந்நிலையில், மைதானம் இல்லாத குறைபாடு தொடர்பில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பாடசாலை சமூகம் பிரதி அமைச்சர் சரத் வீரசேகரவிடம் எடுத்துக்கூறியதன் பயனாக இம்மைதானம் புனரமைக்கபட்டு மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.இத்ரீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தொழில், தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் சரத்வீரசேகர, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.வீரசிங்க, வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம் உள்ளிட்ட பலர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .