2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

அக்கரையில் வான் தோண்டப்படுகின்றது

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அக்கரைப் (ஜே - 283) பகுதியில் மீனவர்களின் படகுகளை நிறுத்தி வைக்கும் இடமான 'வான்' தோண்டும் பணிகள் கோப்பாய் பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் திகதி மீளக்குடியேற  அனுமதிக்கப்பட்ட மேற்படி பகுதியில், 104 குடும்பங்கள் மீளக்குடியேற பதிவுகள் மேற்கொண்டு தற்போது 50 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளன.

மீளக்குடியேறிய குடும்பங்களில் 10 குடும்பங்கள் முழுமையான நேரம் மீன்பிடியையும் 30 குடும்பங்கள் பகுதி நேரமாக மீன்பிடியையும் மேற்கொண்டு வருகின்றன. 

தற்போது, மழை காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், இங்குள்ள மீனவர்கள் மீன்பிடிக்குச் சென்று வருவதற்குத் தேவையான கூடாரங்களையும் தற்போது அமைத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X