2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அத்துமீறிய இந்திய மீனவர்கள் கைது

George   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

இலங்கை கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பருத்தித்துறைக்கு அண்மித்த கடற்பகுதியில் வைத்து இந்திய மீனவர்கள் 9 பேர்,  இலங்கை கடற்படையினரால் இன்று புதன்கிழமை (14) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நாகப்பட்டினம், நாகை மாவட்டத்திலிருந்து வந்து, மீன்பிடியில் ஈடுபட்ட 9 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை, கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இந்த அதிகாரி கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X