Princiya Dixci / 2022 செப்டெம்பர் 08 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமன்றி அரச சீல் மதுபான விற்பனை செய்தமை மற்றும் உடமையில் வைத்திருந்த இருவருக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஒருவரைக் கைது செய்த பளை பொலிஸார், கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நேற்று (07) அவரை ஆஜர்படுத்தினர். குறித்த நபருக்கு 15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது
அதேவேளை, 540 மில்லி லீட்டர் அரச சீல் மதுபானத்தை விற்பனை செய்தமை மற்றும் உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்ட போது, அந்நபருக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
9 minute ago
19 minute ago
22 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago
22 minute ago
27 minute ago