2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அறுவருக்கும் விளக்கமறியல்

Freelancer   / 2022 டிசெம்பர் 02 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன் 

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் வீடொன்றை உடைத்து கொள்ளையிட முயன்ற அறுவரையும் டிசெம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம், புதன்கிழமை (30) உத்தரவிட்டது.

யாழ்.சங்கானை பகுதியை சேர்ந்த ஐவர் மற்றும் புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை பகுதியை சேர்ந்த ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வீடொன்றை உடைத்து கொள்ளையிட முயன்றபோது, உரிமையாளர் சத்தமிட்டதை அடுத்து தப்பிச் சென்ற கொள்ளையர்கள், இளைஞர்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .