Editorial / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்
ஆனந்த சுதாகரின் விடுதலையை வலியுறுத்தி, கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து, கருணை மகஜர் ஒன்றை, இன்று (02 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனந்த சுதாகரின் இரு பிள்ளைகளும், கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் நிலையில், இம்மாணவர்களின் தந்தையை விடுவிக்குமாறு வலியுறுத்தி, சுமார் 2,500க்கும் மேற்பட்ட கையொப்பங்கள் இடப்பட்ட மகஜரை பாடசாலை சமூகம் இணந்து அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த மகஜரை, பாடசாலை அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம், இலங்கை தமிழ் ஆசிரியர் சங்க செயலாளரிடம் கையளித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அதிபர்,
தங்களது பாடசாலையில் கல்வி கற்றுவரும் ஆனந்த சுதாகரின் பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகள், கடந்த காலங்களை விட, தற்போது மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் கல்வி கற்க விருப்பமற்றவர்களாகவும் அதிக யோசனையில் இருந்துகொண்டு, தனிமையை விரும்புபவர்களாகவும் மாறி வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.
இதை ஏற்றுக்கொள்ளமுடியாததாலேயே, பாடசாலை சமூகம் இணைந்து, ஆன்நத சுதாகரை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை தமிழ் ஆசிரியர் சங்க செயலாளர்,
இந்த மாணவர்களைப் போன்று, கடந்த கால யுத்தகாலத்தில், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர் என்றும் எனினும், நல்லாட்சி அரசாங்கத்தின் போது, இவ்வாறு மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதை தாம் வலியுறுத்துவதாகவும் கூறினார்.
இதற்காக, சுமார் 3 இலட்சத்துக்கும் அதிக கையெழுத்துக்களை, கல்வி சமூகம் சார்பில் பெற்று வடமாகாண கல்வி அமைச்சினூடாக, வடமாகாண ஆளுநர், ஐக்கிய நாடுகள் சபை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு, அகிம்சை வழியில் மகஜரை அனுப்பவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago