2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

ஆவரங்கால் வாள்வெட்டு சம்பவம்: மேலும் மூவர் கைது

Princiya Dixci   / 2017 ஜனவரி 29 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் மூவரைக் கைது செய்துள்ளதாக, அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏற்கெனவே மூவர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர், நேற்று (28) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி, அச்சுவேலி தெற்குப் பகுதியினைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் ஆவரங்கால் நாவோதயா பகுதியினைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இடையில்  இடம்பெற்ற கைகலப்பில் ஐவர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X