2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

ஆவா உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல்

Editorial   / 2018 ஜூன் 30 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க

யாழ்ப்பாணத்தில், ஆவா குழு உறுப்பினர் ஒருவருடைய வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அருகே உள்ள இராமநாதன் வீதியில் உள்ள வீட்டின்​ மீதே, நேற்று (29) இரவு, இவ்வாறு பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டர் சைக்கிளில் வந்த 3 பேரே, இத்தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுவிட்டதாக, யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X