2025 மே 19, திங்கட்கிழமை

இ.போ.ச ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Editorial   / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய சாலை நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தும் பிராந்திய முகாமையாளரை மாற்றுமாறு வலியுறுத்தியும் யாழ். பஸ் நிலையத்தில் இன்று (12) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய இணைந்த தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் நடைபெற்றது.

இ.போ.ச வட பிராந்திய சாலையின் நிர்வாகத்தில் பாரிய முறைகேடுகள் நடைபெறுகின்ற அதே வேளை தொடர்ந்தும் நிர்வாகச் சீர்கேடுகளும் அதிகரித்து வருகின்றன. தங்களது பதவிகளுக்காகவும் மற்றும் சலுகைகளுக்காகவும் தொழிலாளர்களை பழிவாங்கும் செயற்பாடுகளை அதிகாரிகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிர்வாக முறைகேடுகள், சீர்கேடுகள் மற்றும் பழிவாங்கல்கள் தொடர்பில் குரல் கொடுக்கின்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மீதும் பொய்க்குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேறகொள்கின்றனர்.

இதனால் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அதிகாரிகளின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று நாங்கள் கோருகின்றோம்.

அத்தோடு வட பிராந்திய நிர்வாகச் சீர்கேடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். தொழிலாளர்கள் மீதான பழிவாங்கல்கள் நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ள மேற்படி சங்கத்தினர் இதற்குரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X