Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், பருத்தித்துறைக்கு அண்மிய கடற்பகுதியில் செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களில் 14 இந்திய மீனவர்களை, எதிர்வரும் நவம்பர் மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா செவ்வாய்க்கிழமை (20) உத்தரவிட்டுள்ளார்.
15 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இராமசாமி வீரமணி என்பவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தமையால், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கமைய, மனிதாபிமான அடிப்படையில் கடந்த 16ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
2 படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்த மீனவர்கள், கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago