2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் 12பேரின் விளக்கமறியலை எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதி வரை நீடிக்க, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இராமலிங்கம் சபேசன், இன்று வெள்ளிக்கிழமை (26) உத்தரவிட்டார்.

ஜனவரி மாதம் 31ஆம் திகதியன்று, இரண்டு விசைப்படகுகளுடன் நுழைந்து, நெடுந்தீவு கடற்பரப்பினுள் மீன்பிடித்த 9 இந்திய மீனவர்களும், ஜனவரி 17ஆம் திகதி ஒரு விசைப்படகுடன் கைதான 3 இந்திய மீனவர்களுமாக 12 இந்திய மீனவர்களின் விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X