Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஜூன் 17 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் புதன்கிழமை (15) இரவு கைது செய்யப்பட்ட 3 இந்திய மீனவர்கள் மற்றும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட 8 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், வியாழக்கிழமை (16) உத்தரவிட்டார்.
கடந்த 2ஆம் திகதி, ஒரு விசைப்படகுடன் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 4 இந்திய மீனவர்களும், கடந்த 5ஆம் திகதி, ஒரு விசைப்படகுடன் நெடுந்தீவுக்கு வடக்கே கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 4 இந்திய மீனவர்கள் ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
இதேவேளை, காரைநகருக்கு தெற்கே கோவளம் கடற்பரப்பினுள் வைத்து புதன்கிழமை (15) இரவு கைது செய்யப்பட்ட மூன்று இந்திய மீனவர்களும், முதற்தடவையாக விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள யாழ். மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
இதேவேளை, 'தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பாவித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம், வேலணை கடற்பரப்பில் வைத்து 11 மீனவர்களை புதன்கிழமை (15) இரவு, கடற்படையினர் கைது செய்துள்ளனர்' என்று கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் குருநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடமிருந்து 3 தொகுதி தங்கூசி வலைகள் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .