2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

செல்வநாயகம் கபிலன்   / 2018 பெப்ரவரி 06 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் 54 பேரின் விளக்கமறியலை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நீடித்து, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் இன்று (06) உத்தரவிட்டார்.

கடந்த டிசெம்பர், ஜனவரி மாத காலப்பகுதியில் 54 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று (06) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல் கிடைக்கப்பெறாமையால், விளக்கமறியலை நீடித்து நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .