Editorial / 2022 நவம்பர் 29 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சரோஜினி இளங்கோவன் இன்று (29) உத்தரவிட்டார்.
காரைநகர் கடற்பரப்புக்குள் 28 ஆம் திகதி திங்கட்கிழமை அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் ஐந்து படகுகளுடன் இந்திய மீனவர்கள் 24 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். குறித்த மீனவர்களை யாழ் மாவட்ட கடல் தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் பொறுப்பெடுத்து ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தி இருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .