Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 05 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் வைத்து இந்தியப் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று (4) மாலை 4.10 மணியளவில் ஊர்காவற்துறை பொலிஸாரினால் இவர் கைதுசெய்யப்பட்டள்ளார்.
47 வயதான இவர் குடிவரவு-குடியகல்வு சட்டத்தை மீறும் வகையில் சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து புடவை விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர் இன்றைய தினம்(5) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago