2025 ஜூலை 05, சனிக்கிழமை

இராணுவத்தினரின் வளர்ப்பு பன்றி தாக்கி ஒருவர் வைத்தியசாலையில்

Gavitha   / 2015 நவம்பர் 03 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

அல்வாய் வடமேற்கு, பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரின் வளர்ப்பு பன்றி தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் திங்கட்கிழமை (02) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

நடேசு சிவரத்தினம் (வயது 55) என்ற நபரே பன்றியின் தாக்குதலில்; காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

அப் பகுதியினை சேர்ந்த குறித்த நபர், இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள தனது காணிக்குள் விறகு பொறுக்கி கொண்டிருந்த போது, பன்றி இவரை தாக்கியுள்ளது.

இதனையடுத்து, உடனடியாக அயலவர்களின் உதவியுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .