2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

இளைஞன் மீது கத்திக்குத்து

Princiya Dixci   / 2016 மே 11 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

புத்தூர் வாதரவத்தைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) மாலை புளியமரத்தின் கீழ் நின்று அலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த இளைஞனின் முகத்தில், நபரொருவர் கத்தியால் குத்தியுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதே இடத்தைச் சேர்;ந்த அசோகதாசன் சதீஸ் (வயது 26) என்ற இளைஞனே முகத்தில் படுகாயமடைந்து அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X