2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இளைஞன் மீது வாள் வெட்டு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தொழிலுக்கு சென்று வந்த இளைஞனை, இணுவில் துரை வீதியில் இடைமறித்த இளைஞர்கள் சிலர், நேற்று வியாழக்கிழமை (03) வாள்வெட்டை மேற்கொண்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் உடுவில் கிழக்கு செட்டி வீதியினை சேர்ந்த விஜயரஞ்சன் சுரேஸ் (வயது 24) என்பவரே கழுத்தில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் தனிப்பட்ட பகை காரணமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .