Editorial / 2020 ஜூலை 12 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ். மாநகர சபையில், கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளைக் கோரியமையாலேயே, தன் மீது சுமந்திரன் உறுப்புரிமை தொடர்பில் வழக்காடிவருகின்றாதெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், ஈ.பி.டி.பியினரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் எனவும் சாடினார்.
யாழ்ப்பாணம் – நாவாந்துறையில், நேற்று (11) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஈ.பி.டி.பி கட்சியினரைக் கடுமையாகச் சாடி, தேர்தல் முடிவடைந்தப் பின்னர் யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்காக ஈ.பி.டி.பியிடம் சரணாகதி அடைந்தனரெனக் குற்றஞ்சாட்டினார்.
இப்போது தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டதன் பின்னர், மீண்டும் ஈ.பி.டி.பியினர் கூட்டமைப்பினையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஈ.பி.டிபியினரையும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனரென, மணிவண்ணன் மேலும் தெரிவித்தார்.
39 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago