Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 04 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
தமிழ் மக்கள் பேரவையின் ஆசீர்வாதத்துடன் உள்ளூராட்சித் தேர்தலில் களமிறங்கத் தீர்மானித்திருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, பொதுக் கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுக் கூட்டணிக்குச் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டமையால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் “உதயசூரியன்” சின்னத்தில் போட்டியிட பொதுக் கூட்டணியில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட சிலர் தீர்மானித்துள்ளனர்.
ஆனால், அதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தலில் பொதுக் கூட்டணி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என இறுதித் தீர்மானம் எட்டப்பட்டால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொதுக் கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்து “சைக்கிள்” சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் என அறிய முடிகின்றது.
உள்ளூராட்சித் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி, தமிழ் காங்கிரஸ் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி , உள்ளிட்டவைகளை ஒன்றிணைந்து, பொதுக் கூட்டணியாகப் போட்டியிடுவதற்குத் தீர்மானித்து இருந்தது.
பொதுக் கூட்டணிக்குப் பெயரை பதிவு செய்து சின்னம் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் ஒன்றான வீ.ஆனந்த சங்கரி தலைமை வகிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் “உதயசூரியன்” சின்னத்தில் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்து உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago