2025 ஜூன் 30, திங்கட்கிழமை

உறவுகளை காக்க வந்த முதியவர்கள் தம்மைக் காக்க வருகின்றனர்

Gavitha   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

தமது உறவுகளையும், உடமைகளையும் பாதுகாக்கவும் நலன்களை பேணவும் முன்னைய காலத்தில் முதியவர்கள் எம்மிடம் வந்தார்கள். ஆனால் தற்போது தம்மை பாதுகாக்குமாறு எம்மிடம் வருகின்றனர் என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் தி.தங்கவேல் புதன்கிழமை (14) தெரிவித்தார்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், சிரேஸ்ட பிரஜைகளின் நலன்களை பேணும் அமைப்பின் அங்குரார்ப்பணம் சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் யாழ்.காரியாலயத்தில் புதன்கிழமை (14) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

'தம்மை பாதுகாக்குமாறு எம்மிடம் வரும் முதியவர்களை நாம் மாலை 5 மணி வரையில் எம்முடன் வைத்து பாதுகாத்து, பின்பு அவர்கள் பிரதேச கிராமஅலுவலருடன் தொடர்புகெண்டு வீட்டை தேடி பிடித்து, அவர்களை அனுப்பி வைக்கும் சந்தர்ப்பங்கள் கூட ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையினை கருத்தில் கொண்டு இந்த அமைப்பின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையிலுள்ளோம்' என்று அவர் கூறினார்.

குறிப்பாக இது முதியோர் நலன் பேணும் அமைப்பாக செயற்படும். முதியவர்களின் மனித உரிமைகள் சார்;ந்த விடயங்களை உள்ளடக்கி இந்த அமைப்பை வடிவமைத்துள்ளோம் என்றார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X