Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 நவம்பர் 07 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
“வடமாகாண சபையால் இதுவரையான காலப் பகுதியில் 29 நியதிச் சட்டங்களை உருவாக்கி உள்ளோம்” என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் 109ஆவது அமர்வு, கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் இன்று (07) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“வடமாகாண சபை எதுவுமே செய்யவில்லை என ஊடகங்கள் விமர்சிக்கின்றன. அண்மையில் யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில், வடமாகாண சபையால் ஒரு நியதிச் சட்டம் கூட இயற்ற முடியவில்லை என குறிப்பிட்டு, கட்டுரை எழுதி உள்ளனர்.
“ஆனால், வடமாகாண சபையால், இதுவரையில் 29 நியதிச் சட்டங்களை உருவாக்கியுள்ளோம். அந்நிலையில், பொய்யான தகவல்களை கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.
“பல தடவைகள், மாகாண சபைக்கு வரும் நிதி திரும்பிப் போகவில்லை என கூறியுள்ள போதிலும், திரும்பத் திரும்ப, வடமாகாண சபைக்கு வரும் நிதி செலவு செய்யப்படாததால் திரும்புகின்றன என எழுதுகிறார்கள்.
“ஊடகங்களில் வெளிவரும் செய்திகளுக்கு, செய்தி ஆசிரியர்களே பொறுப்பானவர்கள். செய்தியாளர்கள் தான் போதிய விளக்கம் இல்லாமல் எழுதிக் கொடுத்தாலும், அதனை செய்தி ஆசிரியர்கள் சரி பார்க்க வேண்டும். ஆனால், செய்தி ஆசிரியர்களும் அதனைச் செய்யவதில்லை.
“எனவே, மாகாண சபை ஒரு நியதிச் சட்டத்தையும் உருவாக்கவில்லை எனக் கட்டுரை வெளியிட்ட பத்திரிகைக்கு, சபையினால் தெளிவுபடுத்தி, குறித்த பத்திரிகை ஆசிரியருக்குக் கடிதம் அனுப்பவுள்ளோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago