2025 ஜூன் 25, புதன்கிழமை

ஊருக்குள் வந்த முதலை சிக்கியது

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 14 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தொண்டமானாறு கடல் நீரேரி பகுதியில் இருந்து அருகில் உள்ள வல்லைப்பகுதி குடிமனைக்குள் புகுந்த 4 அடி நீளமான முதலை ஒன்றை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) பிடித்த இளைஞர்கள், அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தற்போது தொண்டமானாறு கடல் நீரேரியில் வெப்பத்துடன் கூடிய காலநிலையால் நீர் வற்றி காணப்படுகிறது. இதனால் அங்கிருந்து முதலைகள் இடம்பெயர்ந்து அருகில் உள்ள நீர் நிலைகளை தேடி வருவதாக அப்பகுதி முதியவர் ஒருவர் தெரிவித்தார். 

பொலிஸ் நிலையத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள முதலையை வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .