2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எரிபொருள் பெற்றவர்கள் கடமைக்கு செல்ல வேண்டும்

Freelancer   / 2022 ஜூன் 27 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

வடக்கில் தமது கடமைகள் நிமிர்த்தம் எரிபொருளைப் பெற்ற அரசு துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற செல்ல வேண்டும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்தார். 

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண சாரதி காப்பாளர்கள் தாம் கடமைக்கு செல்வதற்குரிய எரிபொருளை புதிய தரப்பினர் தமக்கு பெற்றுத் தரவில்லை என நடத்திய ஊடக சந்திப்பை அடுத்து ஆளுநர் இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்கள் தொடர்பில்  கரிசனையாக உள்ளதோடு அவர்களுக்கான எரிபொருளை தடையின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் தமது கடமைகளை காரணங்காட்டி எரிபொருளை பெற்றவர்கள் தமது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமென ஆளுநர் மேலும் தெரிவித்தார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .