Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 07 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் பெய்த மழை காரணமாக பண்டாரவன்னியன் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட 30 குடும்பங்களை சேர்ந்த 105 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஒட்டுசுட்டான் உதவிப் பிரதேச செயலாளர் ரமேஸ் தெரிவித்தார்.
இவர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர்கள் கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து மக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்து பண்டாரவன்னி தேவாலயத்தில் தங்கவைத்துள்ளனர்
இவர்களுக்கான அடிப்படை தேவைகளை பிரதேச செயலகம் ஒழுங்கு செய்துள்ளதோடு இவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டுக்கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .