Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காங்கேசன்துறைப் பகுதியில் உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள 125 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 6 மாதங்களுக்குள் நலன்புரி முகாம் மக்களை மீள்குடியேற்றம் செய்வேன் எனக்கூறிய உறுதிமொழிக்கமைய இந்தக் காணிகள் விடுவிக்கப்படவுள்ளது.
இந்த 125 ஏக்கர் காணிகளுக்கும் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி உட்பட 3 கிராமஅலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.
அண்மையில் விடுவிக்கப்பட்ட 701.5 ஏக்கர் காணிகளின் காணிப்பத்திரங்கள் உரிமையாளர்களுக்கு வழங்கும் நிகழ்வு விரைவில் நடைபெறவுள்ளதாகவும், அத்தினத்தில் வைத்து 125 ஏக்கர்களும் விடுவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago