2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கோட்டக்கல்வி அலுவலர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

சங்கானை மற்றும் நெடுங்கேணி கோட்டங்களின் கோட்டக் கல்வி அதிகாரிகள் பதவிக்கான விண்ணப்பங்கள் வடமாகாண கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.ரவீந்திரன் தெரிவித்தார்.

இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் - 1 மற்றும் தரம் - 2, இலங்கை அதிபர் சேவை தரம் - 1 மற்றும் தரம் - 2 ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் இந்தப் பதவிக்காக விண்ணப்பிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

வலயக் கல்விப் பணிமனையில் விண்ணப்பப் படிவங்களை பெற்று, பூரணப்படுத்திய பின்னர் வலயக் கல்விப் பணிப்பாளரின் சிபார்சுடன் விண்ணப்பப் படிவங்களை, கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாணம், செம்மணி வீதி நல்லூர் என்னும் முகவரிக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு செயலாளர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .